ஆசிரியர் வீட்டில் 103 சவரன் கொள்ளை வழக்கில் ஒருவர் கைது

கோவையில் தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் 103 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தது. குனியமுத்தூரில் தனியார் பள்ளி ஆசிரியர் ஜெபா மார்ட்டின் வீட்டில் டிசம்பர் 25ல் 103 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி என்பவரை கைது செய்துள்ளனர்.

ஜோலார்பேட்டை அருகே ஆசிரியர் வீட்டில் 40 சவரன் கொள்ளை

ஜோலார்பேட்டை அருகே கணவன் மனைவி ஆசிரியராக உள்ள வீட்டில் 40 சவரன் தங்க நகை கொள்ளை! மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் கிராமம் ராஜூவ் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (42) சின்ன கவுண்டர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் அதேபோல இவருடைய மனைவி கில்பட் சபீனா ராணி (43) அரசு நிதி உதவி பெறும் பள்ளியான மேரிஇம்மாக்குலேட் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து […]