தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவனை கொன்ற மனைவி

ஆந்திரா மாநிலம், அனகாபள்ளி மாவட்டம், சோடவரம் மண்டலம், துர்வோலு (துருவோலு) கிராமத்தைச் சேர்ந்த டேகல சின்னா மற்றும் கொண்டம்மா தம்பதியருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 12 வயது மகன் உள்ளான். இந்த நிலையில் கடந்த ஆண்டு இத்தம்பதியர் கூலி வேலைக்காக தெனாலி நகரத்துக்கு சென்றனர். அங்கு வேலை செய்யும் இடத்தில் மேஸ்திரியாக இருந்த கணேஷ் என்ற நபருடன் கொண்டம்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் பின்னர் தவறான உறவாக (கள்ளக்காதலாக) மாறியது. இந்த […]

கடமை உணர்வுக்குக் குவியும் பாராட்டு: ஆந்திர பெண் காவலரின் நெகிழ்ச்சிச் செயல்

ஆந்திர மாநிலத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்சுக்கு, கைக்குழந்தையுடன் இருந்த பெண் காவலர் ஒருவர் போக்குவரத்தை சீரமைத்து வழி ஏற்படுத்திக் கொடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த 17-ம் தேதி காக்கிநாடாவிற்கு வருகை தந்திருந்தார். இதையொட்டி ரங்கம்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஜெயசாந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக அவர் தனது கைக்குழந்தையை அருகிலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டுப் பணிக்கு வந்திருந்தார். பணி முடிந்த பிறகு, […]

ஆந்திராவில் பந்தயம் போட்டு 19 பாட்டில் பீர் குடித்த 2 மென் பொறியாளர்கள் உயிரிழந்தனர்

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் பண்டவாரி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான மணிகுமார் (35) மற்றும் புஷ்பராஜ் (27) ஆகியோர் சங்கராந்தி விடுமுறையைக் கொண்டாடுவதற்காகத் தங்களது சொந்த ஊருக்கு வந்திருந்தனர். மணிகுமார் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்திலும், புஷ்பராஜ் பெங்களூருவிலும் மென்பொறியாளர்களாகப் பணியாற்றி வந்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த நண்பர்கள் இருவரும், மது அருந்தும் போது யார் அதிக பீர் குடிப்பது என்று விபரீத பந்தயத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆபத்தான போட்டியில், இருவரும் சேர்ந்து […]

போட்டி போட்டு பீர் குடித்த 2 இன்ஜினியர்கள் பலி-ஆந்திராவில் சோகம்

ஆந்திராவில் பந்தயம் போட்டு 19 பாட்டில் பீர் குடித்த 2 மென் பொறியாளர்கள் உயிரிழந்தனர். அன்னமய்யா மாவட்டம், பண்டவாரி கிராமத்தைச் சேர்ந்த மணிகுமார் (35), புஷ்பராஜ்(27) உயிரிழந்தனர். சங்கராந்தி விடுமுறையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் வந்த நண்பர்களின் விபரீத விளையாட்டால் உயிரிழந்தனர்.

ஆந்திராவில் பயங்கரம்: மின்கசிவு காரணமாக 40 குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்து நாசம்

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் சர்லங்கா கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. நேற்று இரவு அங்குள்ள ஒரு குடிசை வீட்டில் எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது கிளம்பிய தீ, காற்றின் வேகத்தில் மளமளவென அருகில் இருந்த மற்ற குடிசை வீடுகளுக்கும் பரவியது. வீடுகள் அடுத்தடுத்து நெருக்கமாக இருந்ததால், தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர். […]

தடை மீறிய சேவல் சண்டை: கோதாவரி மாவட்டங்களில் அலைமோதும் கூட்டம் – எகிறும் அறை வாடகைகள்

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டங்களில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் சேவல் சண்டை உலகப் புகழ்பெற்றது. இந்த ஆண்டு பீமாவரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சேவல் சண்டை உற்சாகம் களைகட்டியுள்ளதால், ஆந்திரா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் தெலங்கானாவிலிருந்து ஏராளமான மக்கள் அங்கு குவிந்து வருகின்றனர். பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் பீமாவரம், ஏலூரு உள்ளிட்ட நகரங்களில் உள்ள ஓட்டல்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன. இதனைப் பயன்படுத்தி ஓட்டல் உரிமையாளர்கள் வாடகையை அதிரடியாக உயர்த்தியுள்ளனர். சாதாரண நாட்களில் […]

மனைவி இறந்த வேதனையில் விபரீத முடிவு: 3 குழந்தைகளுக்கு பாலில் விஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை!

ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் துடுமுலா கிராமத்தைச் சேர்ந்த சுரேந்திரா(35). கட்டுமான தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி(32). மகள்கள் காவ்யா(7), தியானேஸ்வரி(4), மகன் சூர்யாககன்(2). மகேஸ்வரிக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டதாம். இதனால் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றும் குணமாகாத நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டாராம். மனைவி இறந்த வேதனை ஒருபுறம் என்றால், 3 குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் சுரேந்திரா தவித்துள்ளார்.மேலும் வேலைக்கு செல்லாததால் குடும்பத்தை நடத்த வருமானம் […]

பஸ் மீது கார் மோதி 4 பேர் பலி- ஆந்திராவில் பரிதாபம்

ஆந்திர பிரதேசம், மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 26, 2025) காலை பயங்கர சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. திருப்பதியில் இருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்த குவாலிஸ் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை கடந்து எதிர்த்திசையில் வந்த தனியார் பேருந்து மீது வேகமாக மோதியது. இதில் கார் முற்றிலும் நொறுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் காரில் பயணித்தவர்கள் என்று தெரிகிறது.விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக […]

கருப்பாக இருந்ததால் கூடுதல் வரதட்சணை…மருமகளை விரட்டி விட்ட மாமியார்

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் வினுகொண்டா மண்டலம் நடுகட்டாவைச் சேர்ந்த கோபிலட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரராவ் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 4-ந்தேதி திருமணம் நடந்தது. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்ற பழமொழிக்கு ஏற்ப 3 மாதங்களுக்கு பிறகு கோபிலட்சுமிக்கு பிரச்சினை தொடங்கியது.கருப்பு நிறத்தில் உள்ள கோபிலட்சுமியை அவரது கணவர் வெறுத்து ஒதுக்கியதாக தெரிகிறது. மாமனார், மாமியாரும் துன்புறுத்தியதாக தெரிகிறது. திருமணத்தின்போது 25 பவுன் தங்கநகையும், ரூ.12 லட்சமும் கோபிலட்சுமியின் குடும்பத்தினர் […]

ஆம்னி பஸ் கவிழ்ந்து15 பேர் பலி- ஆந்திராவில் சோகம்

ஆந்திர பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டத்தில் மாரெடுமில்லி கேட் ரோடில் தனியார் பேருந்து கழுகில் கவிழ்ந்த விபத்தில் 15 பயணிகள் உயிரிழந்துள்ளனர். விசாகப்பட்டினத்திலிருந்து தெலங்கானா மாநிலம் பத்ராச்சலத்திற்கு சென்ற பேருந்து, ராஜுகரி மெட்டு அருகே கட்டுப்பாட்டை இழந்து ஆழமான கழுகில் விழுந்தது. விபத்தில் 37 பயணிகள் (சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் உட்பட) பாதிக்கப்பட்டனர், அவர்களில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.விபத்து கடந்த இரவு (டிசம்பர் 11) நிகழ்ந்தது. பேருந்து சித்தூர் மாவட்டத்தைச் […]