பெண்ணுக்கு ‘கேஷ் ஆன் டெலிவரி’ மூலம் டார்ச்சர்- கோவையில் வாலிபர் கைது

கோவையில் தனது நிறுவனத்தில் பணியாற்றிய இளம்பெண்ணுக்குத் தொல்லை கொடுக்கும் நோக்கில், நூதனமான முறையில் ஆன்லைன் ஆர்டர்களை அனுப்பி மன உளைச்சலை ஏற்படுத்திய டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாநகரில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி வருபவர் சதீஷ்குமார் (39). இவரது நிறுவனத்தில் ஒரு இளம்பெண் பணியாற்றி வந்துள்ளார். ஏதோ ஒரு காரணத்திற்காக அந்தப் பெண் வேலையை விட்டு நின்ற பிறகு, அவருக்குத் தொல்லை கொடுக்க சதீஷ்குமார் ஒரு மோசமான திட்டத்தைத் தீட்டியுள்ளார். […]