பஞ்சாபில் பயங்கரம்: ஆம் ஆத்மி நிர்வாகி துப்பாக்கியால் சுட்டுக்கொலை

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதியின் ஆம் ஆத்மி பொறுப்பாளர் ராஜ்விந்தர் கவுர் தியாராவின் நெருங்கிய ஆதரவாளரும், கட்சி நிர்வாகியுமான லக்கி ஓபராய் இன்று காலை மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவரது மனைவி ஏற்கனவே ஆம் ஆத்மி சார்பில் நகராட்சித் தேர்தலில் போட்டியிட்டவர் என்பதால், ஜலந்தர் பகுதியில் இவரது குடும்பத்திற்குப் பலமான அரசியல் செல்வாக்கு இருந்து வந்தது. இன்று காலை 7:50 மணியளவில், ஜலந்தரின் மாடல் டவுன் பகுதியில் உள்ள குருத்வாராவிற்கு லக்கி ஓபராய் தனது வாகனத்தில் […]