சட்டப்பேரவையில் நாளை ஆளுநர் உரை: 3 ஆண்டு கால மோதலுக்குப் பின் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை என்ன?
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது. மரபுப்படி ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவது வழக்கம் என்பதால், நாளை காலை ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமைச் செயலகம் வருகை தந்து உரையாற்ற உள்ளார். இதற்காக காலை 9.10 மணிக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து புறப்படும் அவருக்கு, தலைமைச் செயலகத்தில் போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னர் சபாநாயகர் மு.அப்பாவு அவரை வரவேற்று அவைத் தலைவர் இருக்கைக்கு […]