ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம்
ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேரை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் மற்றும் மதன் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாநகர துணை காவல் கண்காணிப்பாளராக விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்: 13 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் இடமாற்றம்
தமிழக காவல்துறையில் நிர்வாக மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையின் படி, இந்த மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த அங்கித் சிங், ஐபிஎஸ், காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டு, வடக்கு சேலம் மாநகர காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். *பொள்ளாச்சி துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய […]