ஜல்லிக்கட்டு…இதையெல்லாம் கடைப்பிடிக்கனும்… தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாகவும், விலங்குகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையிலும் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த நெறிமுறைகள் ஜல்லிக்கட்டு மட்டுமல்லாமல், வடமாடு, மஞ்சு விரட்டு, எருது விடும் நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் என்று அரசு தெரிவித்துள்ளது. போட்டிகளை நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளுக்கு முழுமையாக இணங்கி போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. […]