ரூ.1 கோடி கேட்டு மடாதிபதியை மிரட்டிய இளம்பெண் பெங்களூருவில் கைது
கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்ற மடாதிபதி ஒருவரை ஹனிடிராப் முறையில் மிரட்டி பணம் பறிக்க முயன்ற இளம்பெண்ணை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே மடாதிபதி ஒரு கும்பலால் ஹனிடிராப் முறையில் சிக்க வைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதே போன்றதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிக்கமகளூரு மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்பூர்த்தி (25) என்ற இளம்பெண், சம்பந்தப்பட்ட மடாதிபதியின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகக் […]