ஈடி’ மூலம் தேர்தல் தகவல்களை திருடுவதாக குற்றச்சாட்டு- திரிணாமுல் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

கொல்கத்தா: அமலாக்கத்துறை மூலம் தேர்தல் தகவல்களை திருடுவதாக கூறி டெல்லியில் இருக்கும் அமித் ஷா ஆபீஸ் முன் திரிணாமுல் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் இன்று ஒன்றிய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் பிரம்மாண்ட கண்டன பேரணி நடைபெற்றது. மேற்குவங்கத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக நிறுவனமான ‘ஐ-பேக்’ அலுவலகங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது ஐ-பேக் நிறுவனர் பிரதிக் ஜெயின் வீட்டிற்கு நேரடியாகச் […]