புதுகை-“உங்க கனவை சொல்லுங்க” – 4.65 லட்சம் குடும்பங்களிடம் கணக்கெடுப்பு
உங்க கனவை சொல்லுங்க’ திட்டம்: 4.65 லட்சம் குடும்பங்களிடம் கணக்கெடுப்புதமிழக முதலமைச்சரின் ‘உங்க கனவை சொல்லுங்க’ திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுமார் 4.65 லட்சம் குடும்பங்களின் தேவைகள் மற்றும் கனவுகளைக் கேட்டறியும் பணி இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.
”உங்க கனவை சொல்லுங்க” திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பாடியநல்லூரில் “உங்க கனவை சொல்லுங்க” – தமிழக அரசின் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மக்களை நேரடியாக சந்தித்து அவர்கள் பயன்பெற்ற அரசின் திட்டங்கள், எதிர்கால கனவுகளை கண்டறியும் வகையில் ‘உங்க கனவை சொல்லுங்க’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் ‘மக்கள் தெரிவிக்கும் கருத்துகளை பதிவு செய்ய தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் கைப்பேசி செயலி உருவாக்கம். […]