எஸ்ஐ மகனை வெட்டிக்கொன்ற மர்ம நபர்கள்.. புதுகையில் பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்டம், மாநகராட்சி திருவப்பூர் குட்ஷெட் ரோடு பகுதியில் வசிக்கும் அமரர் மெய்யப்பன் சப் இன்ஸ்பெக்டர் மகன் மேனா. மோகன் இவர் இந்து முன்னணியின் முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்தவர். மோகன் இன்று காலை வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
எஸ்ஐ தேர்வு முடிகள் நிறுத்தி வைப்பு
நேற்று முன்தினம் (ஜன., 27) வெளியான SI தேர்வு முடிவுகளில் பிழை இருப்பதால், அதை திரும்ப பெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சாப்ட்வேர் பிழையால் ஏற்பட்ட தவறு காரணமாக திரும்ப பெறப்படும் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், வகுப்பு பிரிவு ரீதியாக எதுவும் இல்லாமல் முடிவுகள் வெளியானதால், தேர்வர்கள் குழப்பத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.