தோனி ரூ.10 லட்சம் செலுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு

ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் ரூ.10 லட்சம் செலுத்த மகேந்திர சிங் தோனிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. விவாத நிகழ்ச்சியின் சிடியை எழுத்து வடிவமாக மாற்றுவதற்கான கட்டணமாக ரூ.10 லட்சம் செலுத்தவும் கட்டணத்தை மார்ச் 12ம் தேதிக்குள் தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு செலுத்தவும் ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது.

குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக்: எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும் – ஐகோர்ட் உத்தரவு

பிறந்த குழந்தையின் நஞ்சுக்கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டதாக வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு தாமாக முன்வந்து இந்த வழக்கினை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்திய உணவு பாதுகாப்புத் துறை (FSSAI) சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், லக்னோ மற்றும் கொச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஹிமாச்சல பிரதேசம் […]

மெட்ரோ ரயில் நிலையங்கள், ரயில்களில் திடீர் சோதனை நடத்த ஐகோர்ட் உத்தரவு

மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மற்றவர்கள் அமர்வதை தடுக்க திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சேர்ந்த வழக்கறிஞர் வி பி ஆர் மேனன் என்பவர் தொடர்ந்திருந்த பொதுநல வழக்கில், ஒவ்வொரு மெட்ரோ ரயிலிலும் ஒரு முழு பெட்டியும் பெண்களுக்கு ஒதுக்கப்படுவது போல, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே என போதுமான எண்ணிக்கையில் இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். […]

”பராசக்தி” படம் வௌியிட தடை இல்லை… ஐகோர்ட் உத்தரவு

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா உள்ளிட்டோர் நடிப்பில், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பராசக்தி திரைப்படம் ஜனவரி 10 ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், தனது செம்மொழி என்ற கதையை திருடி பராசக்தி திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என இணை இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு […]

புத்தாண்டு கொண்டாட்டம்…குழந்தைகளை அழைத்துவந்தால் நடவடிக்கை…சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நட்சத்திர விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளில் மதுபானம் அருந்தும் இடத்துக்கு குழந்தைகள் அழைத்துச்செல்லப்படுவதாக புகார் வந்தால், உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கும்,காவல்துறைக்கும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. திருவேற்காட்டை சேர்ந்த எம்.காமேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கில், எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது அருந்தும் இடத்திற்கு குழந்தைகள் அழைத்துவரப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளார். இந்த செயல் சட்டப்படி […]

ஞானசேகரன் மீதான குண்டாஸ்-ஐ ரத்து செய்தது ஐகோர்ட்

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. குண்டர் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி ஞானசேகரன் தாயார் கங்காதேவி மனுவை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.