ஆன்லைன் முதலீடு என ஆசை வார்த்தை: தனியார் ஊழியரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க தனியார் நிறுவன ஊழியர் ஒருவரிடம், ஆன்லைன் முதலீடு என்ற பெயரில் மர்ம நபர்கள் ரூ.20 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவரது செல்போன் எண்ணை ‘வி.ஐ.பி. ஸ்ட்ரேடஜி’ என்ற வாட்ஸ்-அப் குழுவில் மர்ம நபர் ஒருவர் இணைத்துள்ளார். அந்தக் குழுவில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் எனப் பல ஆசை வார்த்தைகள் கூறப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் […]

ஓசூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.26 லட்சம் நகை கொள்ளை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேன்கனிக்கோட்டை ஹனிவேலி லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது குடும்பத்தினர் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்குச் சென்றிருந்தனர். சிகிச்சையை முடித்துவிட்டு அவர்கள் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டிற்குள் சென்று சோதனையிட்டபோது, பீரோவில் […]