ஜெயங்கொண்டம்- கடை முன்பு தீக்குளிக்க முயன்ற முதியவர்- பரபரப்பு
ஜெயங்கொண்டம் கடைவீதியில் உள்ள தனியார் பாத்திரக்கடை உரிமையாளரிடம் ரூ 2 லட்சம் பணம் கேட்டு மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயற்சித்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலக்குடியிருப்பு கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (69). இவர் ஜெயங்கொண்டம் கடைவீதியில் உள்ள ஒரு தனியார் பாத்திரக்கடை ஒன்றில் தினக்கூலி அடிப்படையில் கடந்த 26 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார். திடீரென காரணம் இல்லாமல் தன்னை வேலையை விட்டு நிறுத்தி விட்டதால், தனக்கு வாழ்வாதாரம் ஏதும் இல்லாததால் […]