கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்

இன்றைய தமிழக சட்டசபை கேள்வி நேரத்தின் போது, குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ், கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், கும்பகோணத்தில் நவகிரக சுற்றுலா பேருந்து மற்றும் சென்னையில் ‘சென்னை உலா’ சுற்றுலா பேருந்து வசதி ஆகியவை தொடங்கப்பட்டுள்ளது. இது போன்று கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.

போலி பார்க்கிங் ரசீது தயாரித்து மோசடி… 2 பேர் கைது…

கன்னியாகுமரி சுற்றுலாத்தளத்தில் போலி பார்க்கிங் ரசீது கொடுத்து பணம் வசூல் செய்த முருகேஷ் (24) மற்றும் கணேஷ் (22) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரும் அனுமதி இல்லாமல் கள்ள ரசீது தயாரித்து சுற்றுலா பயணிகளிடம் பார்க்கிங் கட்டணம் வசூலித்து பல நாட்களாக மோசடி செய்தது விசாரணையில் உறுதியானது. அவர்களிடம் போலி ரசீதுகள், வசூலித்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு, 2 பேர் மீதும் மோசடி மற்றும் போலி ஆவணம் தயாரித்தல் பிரிவுகளில் […]