கரூரில் அரசியல் மோதல்: பாஜக தலைவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு
கரூரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக மகளிர் அணி சார்பில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் கலந்து கொண்டு பேசுகையில்; கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோ ஆதாரத்துடன் கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் கரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் […]
கரூரில் 4 கோடி மதிப்பில் 17 புதிய பணிகளை VSB துவங்கி வைத்தார்
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 17 இடங்களில் சுமார் 4.01 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கி வைத்த கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி. கரூர் சட்டமன்றத் தொகுதி, தான்தோன்றி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பணி தொடக்க விழா மற்றும் பகுதிநேர நியாய விலை கடை திறப்பு விழா கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 17 இடங்களில் சுமார் 4.01 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்டேட் […]
கரூர் அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் காத்திருப்பு போராட்டம்
கரூர்,தாந்தோன்றி மலை அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் புறக்கணிப்பு போராட்டம் – 80க்கும் மேற்பட்டோர் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் தாந்தோன்றி மலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்துக்குள் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அரசு கல்லூரிகளில் கடந்த 11 ஆண்டுகளாக நிரந்தர பேராசிரியர்கள் நியமனம் நடைபெறவில்லை என்றும், தகுதியுடன் […]
கரூர்: கார் கண்ணாடியை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவேகானந்தர் என்பவர், பட்டுப் புடவைகள் வாங்குவதற்காகக் கரூர் ராயனூர் பகுதிக்கு வந்துள்ளார். புடவைகளை வாங்கிக்கொண்டு நேற்று இரவு மீண்டும் சேலத்திற்குப் புறப்பட்டார். இரவு 8:48 மணியளவில் கரூர் கோவை சாலையில் உள்ள ஓர் உணவகத்தின் முன்பு தனது ஃபார்ச்சூனர் காரை நிறுத்திவிட்டுச் சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், காரை நீண்ட நேரம் நோட்டமிட்டுள்ளனர். சமயம் பார்த்து அவர்களில் ஒருவன் காரின் கண்ணாடியை உடைத்து, உள்ளே பையில் […]
கரூரில் ரசிகர்களுடன் ‘மை லார்ட்’ படக்குழுவினர் கொண்டாட்டம்
கரூரில் ரசிகர்களுடன் ‘மை லார்ட்’ படக்குழுவினர் கொண்டாட்டம் – இயக்குனர் ராஜு முருகன் தனது பிறந்த நாளை திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாடினார். ராஜு முருகன் இயக்கத்தில், நடிகர் சசிக்குமார், நடிகை சைத்ரா ஆச்சார், ஆஷா சரத், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்துள்ள “மை லார்ட்” திரைப்படம் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம், அரசு ஆவணங்களில் உயிருடன் இருந்தும் ‘இறந்தவர்கள்’ என பதிவாகும் நபர்கள், தங்களது அடையாளத்தை மீட்டெடுக்கவும், தங்களுக்கு ஏற்பட்ட […]
கரூரில் 4 சக்கர வாகனங்களுக்கு ரிப்லெக்ஷன் ஸ்டிக்கர் ஒட்டி காவல்துறை விழிப்புணர்வு
கரூர், சுக்காலியூர் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர். டிராக்டர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்த காவல்துறையினர், பின்புறத்தில் சிவப்பு பிரதிபலிப்பு விளக்கு (Red Reflector) அல்லது பிரதிபலிப்பு ஸ்டிக்கர் இல்லாமல் சென்ற வாகனங்களை கண்டறிந்தனர். அவ்வாறான வாகனங்களில் உடனடியாக சிவப்பு பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களை ஒட்டியதுடன், வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும் அறிவுரை வழங்கினர்.மேலும், நம்பர் பிளேட் இல்லாமல் இயக்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்கும் எச்சரிக்கை […]
பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.10,000 லஞ்சம்: குளித்தலை விஏஓ கைது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள வடவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சின்னத்துரை (64). இவரது நிலப் பட்டாவில் பெயர் தவறாக இருந்ததால், அதனைத் திருத்தம் செய்யக் கோரி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் வடவம்பாடி கிராம நிர்வாக அலுவலராக (VAO) சிவக்குமார் (48) என்பவர் பணியில் சேர்ந்தார். பெயர் மாற்றத்தைச் செய்து தர சிவக்குமார், விவசாயி சின்னத்துரையிடம் 10,000 ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சின்னத்துரை, இது குறித்து […]
தமிழக முதல்வர் குறித்து அவதூறு கருத்து- அதிமுக ஐடி விங் நிர்வாகி கைது
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக ஈரோடு மண்டலம் சமூகவலைதள பிரிவு துணை தலைவர் பசுபதி செந்தில் என்பவர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த பசுபதி செந்திலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, பசுபதி […]
கரூர்- அதிகாரிகளை முற்றுகையிட்ட அதிமுகவினர் உட்பட 50 பேர் மீது வழக்கு
கரூர் மாவட்டம் ஆண்டான்கோவில் கிழக்கு, ரெயின்போ நகர் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் புதிய கட்டிவரும் வீட்டில்கட்டுமான பணிக்கும், அருகாமையில் தனபால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அரசு அனுமதியுமின்றி சட்டவிரோதமாக பெருமளவில் ஆற்று மணல் கடத்தி வரப்பட்டு, அங்குள்ள காலி இடத்தில் கொட்டி வைக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு புகார்கள் வந்தன. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், […]
கரூரில் மாநில அளவில் கபடி போட்டி.. பரிசு ரூ.5,23,168.. VSB பிரம்மாண்டம்
கரூரில் திமுக சார்பில் தமிழக முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாநில அளவில் பெண்களுக்கும, மாவட்ட அளவிலான ஆண்களுக்கும் மாபெரும் கபடி போட்டி. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வருகின்ற மார்ச் 1ம் தேதி 73ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் கரூர் மாவட் ட திமுக சார்பில் வெங்கமேடு பகுதியில் மாநில அளவிலான மாபெரும் கபடி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மாநில அளவில் […]