கரூர் அருகே 1000 ஆண்டு பழமையான சிவன் கோவில் கலசம் திருட்டு

கரூர் அருகே சங்கரன் மலைப்பட்டியில் மலை உச்சியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் கலசம் திருட்டு: போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே 1,000 ஆண்டு பழமையான சங்கரன்மலைப்பட்டியில் மலை உச்சியில் சௌந்தரநாயகி உடன் சங்கரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் பொன்னர், சங்கர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறு குறித்த கல்வெட்டுகள் கோவில் மலை பாறைகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் 200 ஆண்டுகளுக்கு முன்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. […]