உதகை அருகே காட்டெருமை தாக்கி பெண் பலி

உதகை அருகே உள்ள கொதுமுடி கிராமத்தைச் சேர்ந்த மலர்க்கொடி (45) என்பவர், இன்று காலை வழக்கம் போலத் தேயிலை தோட்டத்தில் வேலை செய்வதற்காகச் சென்றுள்ளார். அப்போது புதருக்குள் மறைந்திருந்த காட்டெருமை ஒன்று திடீரென அவரைத் தாக்கியுள்ளது. தேயிலை செடிகளுக்கு இடையே மறைந்திருந்த காட்டெருமை, மலர்க்கொடியை எதிர்பாராத விதமாக முட்டித் தள்ளியது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அக்கம்பக்கத்தில் வேலை செய்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது, மலர்க்கொடி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு […]