கரூர் நெரிசலில் சிக்கி காயமடைந்த 3 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்..

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து சிபிஐ அதிகாரிகள் கரூர் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலுச்சாமிபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். […]