டெல்டா மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தற்போது சற்றே வலுவிழந்து ‘காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக’ மாறியுள்ளது. இது தற்போது சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே சுமார் 490 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் இந்தத் தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் பயணித்து இன்று மாலை வட இலங்கையின் திரிகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் இடையே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. […]