தேமுதிக விருப்பமனு.. கால அவகாசம் நீட்டிப்பு..
தேமுதிக விருப்ப மனு விநியோகம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று மாலையுடன் விருப்ப மனு விநியோகம் நிறைவடைய இருந்த நிலையில் 3 நாட்களக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.பிப்ரவரி 15 மாலை 5 மணி வரை தேமுதிக விருப்பமனு அளிக்கலாம் என தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க அரிய வாய்ப்பு
குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழில் இதுவரை பெயர் பதிவு செய்யாதவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்த்துக் கொள்ளும் கால அவகாசத்தை 2026 செப்டம்பர் 26-ம் தேதி வரை நீட்டித்து இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ளார். பொதுவாக, பிறப்பு பதிவு செய்யப்பட்டதில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் பெயர் சேர்க்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், பல காரணங்களால் பலரும் தங்கள் குழந்தைகளின் பெயரைச் சான்றிதழில் […]
தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையம் தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 97 லட்சத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்டு, மொத்தம் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் 66 லட்சம் பேர் இடம் மாறிச் சென்றவர்களாகக் காட்டப்பட்ட நிலையில், விடுபட்டவர்கள் மற்றும் புதிய வாக்காளர்களைச் சேர்க்க கடந்த டிசம்பர் […]
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தொடங்கியது. கணக்கீட்டு படிவங்கள் பெறும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 97 லட்சத்து 37 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதால், தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சமாக குறைந்தது.இதையடுத்து, இறந்தவர்கள் தவிர்த்து மீதமுள்ளவர்களில் தகுதியான வாக்காளர்கள் மற்றும் […]
ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
ஆதார் கார்டை இலவசமாக அப்டேட் செய்வதற்கான அவகாசம் 2026 ஜூன் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், ஆதார் கார்டை அப்டேட் செய்ய நினைப்பவர்களுக்கு பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது. ஆதாரில் இலவசமாக புதுப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ‘MY ஆதார்’ அல்லது ‘M-ஆதார்’ செயலி வாயிலாக பொதுமக்கள் எவ்வித கட்டணமுமின்றி வரும் ஜூன் 14ம் தேதி வரை ஆன்லைனில் புதுப்பித்து கொள்ளலாம். மேலும், 7 முதல் 15 வயதுக்குட்பட்ட […]
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு…மாணவர்களின் பெயர் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம்
தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட இருக்கிறது. இதையடுத்து எமிஸ் தளத்தில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம், கைப்பேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளதா? என்பதை சரிபார்த்து திருத்தம் இருப்பின் அவற்றை மேற்கொள்ளலாம் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் அரசு தேர்வுத்துறை தெரிவித்திருந்தது. அதன்படி, மாணவர்களின் விவரங்களை தேர்வுத்துறை இணையதளத்தில் இம்மாதம் நவம்பர் 19-ந்தேதிக்குள் பதிவேற்றம் செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கால […]