அரியலூர்- பள்ளி அருகில் உலாவிய பெரிய முதலை- அச்சம்

அரியலூர் மாவட்டம் ஆதனூர் அரசு நடுநிலைப்பள்ளியை ஒட்டியுள்ள பெரிய ஏரியில் நீண்ட முதலை ஒன்று உள்ளதை பார்த்த பள்ளி மாணவர்களும், கிராம மக்களும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக வனத்துறை மூலம் முதலையைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி அருகிலுள்ள ஆதனூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1988 ஆம் ஆண்டு அரசு ஆரம்பப் பள்ளியாக தொடங்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு முதல் அரசு நடுநிலைப் […]