மக்களின் உயிருடன் விளையாடிய கலப்பட பால் ஆலை: 5 பேர் கைது
குஜராத் மாநிலத்தில் 5 ஆண்டுகளாக கலப்பட பால் விற்பனை செய்து வந்த ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் யூரியா, சோப்பு பவுடர், நச்சு ரசாயனம் கலந்து பால் உற்பத்தி செய்தது அம்பலம் ஆகியுள்ளது. சபர்கந்தா, மெஹ்சனா மாவட்ட மக்கள் 5 ஆண்டுகளாக கலப்பட பால், மோரை உட்கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கலப்பட பால் உற்பத்தி செய்து வந்த ஆலை கண்டறியப்பட்டு 5 பேரை குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. […]
குஜராத்தில் அதிர்ச்சி: 6.5 மில்லி பாம்பு விஷம் ரூ. 6 கோடியா? – திக் திக் பின்னணி
குஜராத் மாநிலம் சூரத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பாம்பு விஷத்தை விற்க முயன்ற கும்பலைச் சிறப்புப் படை போலீசார் சினிமா பாணியில் அதிரடியாக கைது செய்துள்ளனர். சூரத்தில் போலீசார் நடத்திய சோதனையில், சோனி என்பவர் வைத்திருந்த சிறிய டப்பாவில் 6.5 மில்லி லிட்டர் கொடிய பாம்பு விஷம் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.5.85 கோடி ஆகும். கைது செய்யப்பட்ட சோனியிடம் நடத்திய விசாரணையில், அவர் இதனை அதிக விலைக்கு விற்கத் […]
கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி கோர விபத்து…3 பேர் பலி
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் பகுசாரா பகுதியில் இன்று அதிகாலை கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 4 பேர் பயணித்தனர். பகுசாரா பகுதியில் உள்ள சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயமடைந்தார்.தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த நபரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த விபத்து குறித்து […]
குஜராத்தில் ஆற்றில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விபத்து…5 பேர் படுகாயம்…
குஜராத் மாநிலம் வல்சாட் நகரில் உள்ள அவுரங்கா ஆற்றின் மீது பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. வல்சாட் நகரை அருகில் உள்ள கிராமங்களுடன் இணைக்கும் வகையில் சுமார் 700 மீட்டர் நீளத்திற்கு, ரூ.42 கோடி மதிப்பீட்டில் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. பாலத்தின் கட்டுமானப் பணியை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இன்று வழக்கம்போல் பாலத்தின் கட்டுமானப் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தின் இரண்டு தூண்களுக்கு […]
வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள பர்வதிபாட்யா என்ற இடத்தில் 7 மாடிகளை கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் பல்வேறு ஜவுளி கடைகள், கிடங்குகள் ஆகியவை உள்ளன. இந்நிலையில், இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் இன்று காலை எதிர்பாராத விதமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியது. தீ விபத்து குறித்து தகவலறிந்து 22 தீயணைப்பு வாகனங்களில் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை […]
குஜராத்தில் 3 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நாசவேலைக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மூன்று பயங்கரவாதிகள் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர்.பயங்கரவாதிகள் ஆயுதங்களைப் பரிமாறிக் கொள்ளும்போது குஜராத் தீவிரவாத தடுப்புப் படையினர் அவர்களைச் சுற்றி வளைத்து கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. காவல் துணைக் கண்காணிப்பாளர் வீரஜீத்சின் பார்மர் கண்காணிப்பில் தீவிரவாத தடுப்புப் படையினர் சந்தேகத்துக்குரிய சிலரை கடந்த ஓராண்டாக அணுக்கமாகக் கண்காணித்து வந்தனர். அப்போது, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ள மூன்று பேர் குஜராத் மாநிலத்துக்குள் ஊடுருவி இருப்பதாக […]