குடிநீர் பாட்டில்களில் மைக்ரோ பிளாஸ்டிக்: எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும் – ஐகோர்ட் உத்தரவு

பிறந்த குழந்தையின் நஞ்சுக்கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டறியப்பட்டதாக வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு தாமாக முன்வந்து இந்த வழக்கினை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்திய உணவு பாதுகாப்புத் துறை (FSSAI) சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், லக்னோ மற்றும் கொச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஹிமாச்சல பிரதேசம் […]