தங்கப் பெண்ணுக்கு தங்க மோதிரம் பரிசு
குப்பையில் கிடந்த 45 சவரன் நகைகளை உரியவரிடமே ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவிற்கு கடல் கடந்தும் பாராட்டுகள் குவிகின்றன. பத்மாவின் நேர்மையை அறிந்த மலேசிய சட்டத்துறை துணை அமைச்சர் குலசேகரன் அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்துள்ளார். தனது உதவியாளரான வடிவுக்கரசி என்பவரை சென்னைக்கு அனுப்பி வைத்து பத்மாவிடம் பரிசை வழங்கியதோடு, வீடியோ காலில் உரையாடி மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
சென்னை கடற்கரைகளில் குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை
சென்னையின் அடையாளமாகவும், சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இடமாகவும் விளங்கும் மெரினா கடற்கரையைத் தூய்மையாகவும், சர்வதேச தரத்திலும் பராமரிக்கப் பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், கடற்கரையின் சுகாதாரத்தைப் பேணுவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு என வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மெரினா கடற்கரையைத் தூய்மைப்படுத்த 7 நவீன இயந்திரங்கள் மற்றும் சுழற்சி முறையில் 274 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் நாள்தோறும் சராசரியாக 4 மெட்ரிக் […]