ஊருக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம்- பொதுமக்கள் அச்சம்

கரூர் அருகே மகிளிப்பட்டி கிராமத்தில், வனபகுதியிலிருந்து வந்த 100க்கு மேற்பட்ட குரங்குகள் ஊருக்குள் புகுந்து சேட்டைகள் செய்வதால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். பள்ளி மாணவர்கள் கொண்டு செல்லும் உணவு பைகளை பிடுங்கிக் கொண்டும். ஓட்டு வீடுகளை சேதப்படுத்தி உள்ளே சென்று உணவுப் பொருட்களை சூறையாடி வருவதால் பொதுமக்கள் வேதனை. வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மகிளிப்பட்டி, உடையான்தோட்டம், எலுமிச்சைபண்ணை, தொட்டியப்பட்டி, லாலாபேட்டை ஆகிய கிராமங்கள் உள்ளன. […]