குருசிலாப்பட்டு அருகே அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூர் மாவட்டம் குருசிலாப்பட்டு அடுத்த பாப்பானூர் மேடு பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால், இருணா பட்டு மற்றும் குருசிலாப்பட்டு எனும் இரண்டு பஞ்சாயத்துகளுக்கு இடையில் இப்பகுதி அமைந்துள்ளதால், இரண்டு பஞ்சாயத்து நிர்வாகங்களும் இப்பகுதிக்கு சாலை, குடிநீர், மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்காமல் புறக்கணித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனைத் தொடர்ந்து பலமுறை துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இன்று காலை […]