குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில் சனி மகா பிரதோஷம்: திரளான பக்தர்கள் வழிபாடு

கரூர் மாவட்டம் குளித்தலையில், திருநாவுக்கரசர் மற்றும் மாணிக்கவாசகரால் பாடப்பெற்ற, சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த ஸ்ரீ கடம்பவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. காசிக்கு அடுத்தபடியாகக் காவிரி நதிக்கரையில் வடக்கு நோக்கி அமைந்துள்ள இந்த சிவத்தலத்தில், இன்று சனி மகா பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த விழாவையொட்டி, நந்தி பெருமானுக்குப் பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம் செய்யப்பட்டது. […]

குளித்தலை அருகே ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் சோமவார விழா

குளித்தலை அருகே அய்யர்மலை ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலில் 3வது சோமா வாரத்தினை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரெத்தினகிரிஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. கடல் மட்டத்திலிருந்து 1178 அடி உயரத்தில் 1017 படிக்கட்டுகளைக் கொண்ட புகழ்பெற்ற சிவஸ்தலமாகும். மலை உச்சியின் மேல் அமையப் பெற்ற இந்த சிவஸ்த லத்தில் ஆண்டுதோறும் […]