குடியரசு தின விழா: கூடலூர் தேயிலைத் தோட்டத் தொழிலாளிக்கு ஜனாதிபதி அழைப்பு
நாட்டின் 77-வது குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி டெல்லியில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்த உள்ளார். இவ்விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் உள்ள பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மில்லிகுன்னு கிராமத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளி இந்திராணிக்கு, குடியரசு தின விழாவில் பங்கேற்குமாறு ஜனாதிபதி திரவுபதி முர்முவிடமிருந்து அதிகாரப்பூர்வ அழைப்புக் கடிதம் வந்துள்ளது. நேற்று […]