மத்திய அரசை கண்டித்து.. அனைத்து தொழிற்சங்கங்கள் சாலை மறியல்- கைது

கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் மத்திய மோடி அரசு தொழிலாளர் விரோத மற்றும் விவசாயிகளின் விரோத நடவடிக்கைகளை கைவிடக் கோரி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர் ‍, நூறாண்டு காலமாக போராடி பெற்ற தொழிற்சங்க உரிமைகள் தொழிலாளர்கள் உரிமைகளை பறிக்கும் தொழிலாளர் சட்டத் தொகுப்பை திரும்ப பெற […]

சென்னையில் சீமான் கைது

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச் சங்கத்தினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பத்தாவது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் ஊரக மற்றும் நகர்ப்புற மகளிர் திட்ட பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் மாவட்ட நிர்வாகத்தால் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களை மகளிர் மேம்பாட்டு நிறுவன பணியாளர்களாக அங்கீகரித்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் பணியாளர்களை காலமுறை […]

கவர்னர் காரைத் துரத்திய போதை வாலிபர்கள்: கிண்டியில் அதிரடி கைது

நேற்று இரவு திருவான்மியூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு, கவர்னர் ஆர்.என். ரவி தனது காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் சூழ கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அருகே கவர்னரின் கார் வந்தபோது, போலீஸ் பாதுகாப்பையும் மீறி பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் திடீரென கவர்னர் காரின் அருகே மிக நெருக்கமாகச் சென்றனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்புப் பிரிவு போலீசார், வாகனத்தை நிறுத்தினால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் […]

ரூ.40,000 கோடி வங்கி மோசடி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முன்னாள் தலைவர் புனித் கார்க் கைது

ரூ.40,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்) நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் இயக்குநருமான புனித் கார்க்கை அமலாக்கத்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது. அனில் அம்பானி தலைமையிலான இந்த நிறுவனம் மற்றும் அதன் குழும நிறுவனங்கள் மீது சுமத்தப்பட்ட பணமோசடி புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே ரூ.11,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ள அமலாக்கத்துறை, தற்போது புனித் கார்க்கின் மனைவியின் பெயரில் உள்ள பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகளையும் […]

துப்பாக்கி காட்டி மிரட்டிய அதிமுக நிர்வாகி கைது

நெல்லிக்குப்பம் அருகே செம்மண் குவாரி விவகாரத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகி கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி மற்றும் குண்டுகள் பறிமுதல் செய்தனர். துப்பாக்கியுடன் தகராறில் ஈடுபட்ட வீடியோ வைரலான நிலையில், அதிமுக நிர்வாகி கைது செய்யபட்டார். துப்பாக்கி காட்டி தகராறில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி கோபால் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஐந்தாண்டு பணி முடிந்த சமையல் உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் 9000 ரூபாய் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி […]

சொத்தை பிரித்து தர மறுத்த தாயை கொன்ற மகன்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள மிட்டா வடமலபுரம் கிராமத்தைச் சேர்ந்த துரைசிங்கம் என்பவரின் மனைவி பேச்சியம்மாள்(70). இவருக்கு 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளது அனைவருக்கும் திருமணமாகிய நிலையில் பேச்சியம்மாள், அதே கிராமத்தில் தனியாக வசித்துக்கொண்டு விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இவர் கடந்த ஜனவரி 3-ம் தேதி முதல் காணாமல் போனதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் காணாமல் போன மூதாட்டி பேச்சியம்மாளை அவரது மகன்கள் மற்றும் குடும்பத்தினர் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் தேடிவந்த நிலையில், […]

இடைநிலை ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது-சென்னையில் பரபரப்பு

சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 14-வது நாளை எட்டியுள்ளது. அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும், ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அரசின் “நோ ஒர்க் – நோ பே” அதிரடி: ஆசிரியர்களுடன் நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தொடக்கக் கல்வித்துறை தற்போது கடுமையான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. அதன்படி, […]

உதட்டில் லிப்ஸ்டிக்.. முகத்தில் பர்தா.. சினிமா பாணியில் தப்பிய முன்னாள் காவலரைத் தூக்கிய உபி போலீசார்

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் பகுதியைச் சேர்ந்த ராம் பரோசி என்பவர், ராஜஸ்தான் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியாற்றி பணிநீக்கம் செய்யப்பட்டவர் ஆவார். இவர் மீது ஏற்கனவே 5க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த 15ம் தேதி, 16 வயது சிறுமியின் சகோதரரை கடைக்கு அனுப்பிவிட்டு, வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமியை இவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான […]

குடும்ப தகராறு.. கணவனை உயிரோடு எரிக்க முயன்ற மனைவி கைது

திருச்சி கீழ சிந்தாமணி பூசாரி தெரு இந்திரா நகரை சேர்ந்தவர் பிரகாஷ்( 39). ஏசி மெக்கானிக் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரமணமணி (34). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. குழந்தை இல்லை. இந்நிலையில் பிரகாஷ் தனது மனைவியின் நகையை அடகு வைத்து பணம் பெற்றார். பின்னர் அந்த பணத்தை வைத்து வீட்டை குத்தகைக்கு எடுத்தார். பிறகு அடகு வைத்த நகையை மீட்பது தொடர்பாக இருவருக்குள் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் […]