மது அருந்த பணம் தராத பாட்டியை கொன்ற பேரன்- அதிர்ச்சி சம்பவம்

கடலூர் மாவட்டம் அருகே மது குடிக்கப் பணம் தராத ஆத்திரத்தில், தனது சொந்தப் பாட்டியையே அடித்துக் கொன்ற பேரனின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் அருகே உள்ள வீ. காட்டுப்பாளையத்தில் இரும்பு பெட்டியில் இருந்து மூதாட்டி சின்னப்பொண்ணு சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் பேரனிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காத்திருந்தது பெரும் அதிர்ச்சி.தனது பாட்டியிடம் மது குடிக்கப் பணம் கேட்டு அந்த இளைஞர் தகராறு செய்துள்ளார். […]