மும்பையில் சினிமா பிரபலங்களுக்கு குறி: ரன்வீர் சிங் வீட்டிற்குத் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு
மும்பையில் நடிகர் ரன்வீர் சிங்குக்கு மர்மநபர்கள் கொலை மிரட்டல் விடுத்து பணம் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பிரபல இயக்குனர் ரோகித் ஷெட்டி வீட்டின் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜூகு பகுதியில் உள்ள அவரது வீட்டின் மீது 5 ரவுண்டுகள் சுடப்பட்டதில், கட்டிடத்தின் சுவர்களில் மூன்று ஓட்டைகள் விழுந்தன. இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் புனேவில் இருந்து கடத்தி […]