ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடை நாளை அடைப்பு
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் நடை நாளை அடைக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் மகா சிவராத்திரி திருவிழா மூன்றாம் நாள் திருநாளை ஒட்டி கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு சாமி புறப்பாடு உள்ளதை அடுத்து திருக்கோயில் நடை நாளை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து நாளை அதிகாலை 2 மணிக்கு நடை திறந்து அதிகாலை 2:30 மணிக்கு முதல் மூன்று மணி வரை ஸ்படிலிங்க பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து பூஜை […]
ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.2 கோடியே 20லட்சம் காணிக்கை
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலுக்கு தினமும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம் அந்த பக்தர்கள் கோவிலில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கையாக தங்கம் வெள்ளி மற்றும் ரொக்கத்தை உண்டியலில் செலுத்துவது வழக்கம் அவ்வாறு செலுத்தப்படும் காணிக்கைகள் மாதம் தோறும் எண்ணப்படுவது வழக்கம் அதன்படி இன்று மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் கருடாழ்வார் மண்டபத்தில் கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலமாக என்ன பட்டது… கடந்த டிசம்பர் […]
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு…நாளை 14 மதுகடைகள் மூட உத்தரவு
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கை ஒட்டி நாளை 14 மதுக்கடைகளை மூட உத்தரவு அளித்துள்ளார். மன்னார்குடி நகரப்பகுதியில் உள்ள 14 மதுபானக்கடைகளை மூட திருவாரூர் எஸ்.பி., உத்தரவு அளித்துள்ளார். பிரசித்திப்பெற்ற மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு விழா நாளை நடைபெற உள்ளது. மன்னார்குடி உள்ளிட்ட 3 தாலுகாக்களுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்தார்
திருப்பரங்குன்றம் கோயில் தீபத்தூண் விவகாரம்-ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு
மதுரை திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தில் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, ‘தூணில் தீபம் ஏற்ற அனுமதி உண்டு; ஆனால் பொதுமக்களுக்கு அங்கு அனுமதி கிடையாது’ எனத் தெரிவித்து […]
கோயில்களில் முதல் மரியாதை-எப்போதும் தெய்வத்துக்கு தான்… உத்தரவு
கோயில்களில் முதல் மரியாதை என்பது எப்போதும் தெய்வத்துக்கு தான் கொடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில், தங்கள் ஆசிரம மடாதிபதிக்கு 1992 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த பஞ்ச முத்திரை முதல் மரியாதை 2023 ஆம் ஆண்டு முதல் திடீரென நிறுத்தப்பட்டதை எதிர்த்து ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் […]