அடகு கடையின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளை

கோவை சிங்காநல்லூர் வசந்தாமில் பகுதியில் ரமேஷ்குமார் என்பவர் மகாதேவ் என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். கடையின் பின் புறத்தில் அவரது வீடு உள்ளது.நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கடைக்கு விடுமுறை அளித்த அவர் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றுள்ளார். நேற்றிரவு சுமார் 11 மணியளவில் கடையின் பின்புறமுள்ள ஷட்டரை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த சுமார் 70 சவரன் தங்க நகை மற்றும் 20 கிலோ வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.கொள்ளை சம்பவம் […]

கோவை-மயான கொள்ளை பூஜையில் ஆக்ரோசமாக எலும்பை கடித்த பூசாரி

மகா சிவராத்திரி நிகழ்வையொட்டிம் மாசி மாத அமாவாசை நிகழ்வையொட்டியும் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் மயான கொள்ளை நிகழ்வு நடைபெறும். அதே போல் கோவை சொக்கம்புதூர் பகுதியில் உள்ள சுடுக்காட்டிலும் ஆண்டுதோறும் மயான கொள்ளை நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் மயான கொள்ளை நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனையொட்டி சுடுக்காட்டில் மண்ணில் மாசாணியம்மன் சிலை செய்து அலங்கரிக்கப்பட்டிருந்து.பின்னர் பம்பை, உடுக்கை, இசைக்க அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து மயானத்திற்கு வந்த கோவில் பூசாரி […]

கோவையில் 1,206 மருத்துவ முகாம்கள்…17.83 லட்சம் பேர் பயன்

கோவை, பொள்ளாச்சியை அடுத்த ரெட்டியாரூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தி.மு.க. ஆனைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.நல்லூர் யுவராஜ் தலைமையில் நேற்று நடந்தது. பொள்ளாச்சி சார் ஆட்சியர் ராமகிருஷ்ணசாமி, தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்துகொண்ட சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பயனாளிகளுக்கு மருத்துவ அடையாள அட்டை மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட […]

கோவை- காதல் திருமணம் செய்த தம்பதி..கேக் வெட்டி கொண்டாட்டம்

பிப்ரவரி 14ம் தேதியான இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் காதலர் தினம் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இப்படிப்பகத்தில் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு அன்பை பரிமாறிக் கொண்டனர். மேலும் இந்த நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சாதி மத வேறுபாடுகளை கடந்து வாழ வேண்டும், சாதி மத பேதமற்ற சமுதாயத்தை அமைத்திட வேண்டும், […]

கோவை குண்டுவெடிப்பு 28-ம் ஆண்டு நினைவு தினம்- திதி கொடுத்து அஞ்சலி

கோவை குண்டுவெடிப்பு 28-ம் ஆண்டு நினைவு தினம் : நொய்யல் கரையில் திதி கொடுத்த அஞ்சலி செலுத்திய விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் – நினைவுத் தூன் அமைக்க வலியுறுத்தல். கோவை மாநகரையே உலுக்கிய 1998-ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் 28-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.உயிரிழந்த 58 அப்பாவி மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, பேரூர் நொய்யல் படித்துறையில் விஸ்வ இந்து பரிஷத்தின் தர்ம யாத்திரா அமைப்பு சார்பில் அஞ்சலி செலுத்தப் பட்டது.விஸ்வ […]

கோவை-சரக்கு வாகனம் மோதி கல்லூரி மாணவி பலி- மறியல்-பரபரப்பு

கோவை மேற்கு புறவழி சாலையில் பயணிகள் ஆட்டோமேடு சரக்கு வாகன மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம் மேற்கு புறவழி சாலையில் பயணிகள் ஆட்டோ மீது சரக்கு ஆட்டோ ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் தனியார் கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தால் மேலும் சில பயணிகள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர் […]

கோவையில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் தீவிர சோதனை

கோவை குண்டு வெடிப்பு தினத்தை முன்னிட்டு முக்கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி கோவையில் அரங்கேறிய குண்டு வெடிப்பில் பலர் உயிரிழந்தனர் பலர் படுகாயம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து வருடம் தோறும் பிப்ரவரி 14-ஆம் தேதி குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெறும். அதில் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு […]

கோவை- வனப் பகுதிக்குள் சடலமாக மீட்கப்பட்ட முதியவர்

கோவை, தடாகம் சுற்றுக்கு உட்பட்ட வன எல்லைப் பகுதியில் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை தடாகம் அருகே வீரபாண்டி கிராமம், கொண்டனூர் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 68). இவர் நேற்று (12.02.2026) மாலை தனது ஆடுகளை மேய்ப்பதற்காக வழக்கம் போல வன எல்லையை ஒட்டிய பகுதிக்குச் சென்று உள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் […]

தொழிலாளர் சிலையை கோவை கலெக்டர் திறந்து வைத்தார்

கோயம்புத்தூர் மாநகராட்சி உப்பிலிபாளையம் கோர்ட் ரவுண்டான பகுதியில் அனிகா தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட உளியால் சிலை செதுக்குவது போன்ற அமைப்பினை மாவட்ட கலெக்டர் பவன்குமார் அவர்கள் திறந்து வைத்தார். கோவை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகரத்தை அழகுப்படுத்தும் விதமாக ரவுண்டானா இடங்களில் சிலைகள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அதேபோல பல்வேறு இடங்களில் சிலைகள் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியாக உப்பிலிபாளையம் அருகே உள்ள ரவுண்டானாவில் தொழில் நகரத்தை மையப்படுத்தி கையில் உளியால் […]

2025ம் ஆண்டில் 15.65 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகள் மலேசியா பயணம்

மலேசியாவை சிறந்த சுற்றுலா இலக்காக மேம்படுத்தும் நோக்கில், டூரிசம் மலேசியா, மலேசியா சுற்றுலா பயண முகவர்கள் சங்கத்துடன் இணைந்து “விசிட் மலேசியா இயர் 2026“-ஐ பிரபலப்படுத்த, “சேல்ஸ் மிசன் 2026“ எனும் பயண ஊக்குவிப்பு நிகழ்ச்சி கோவையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் மலேசியாவைச் சேர்ந்த 49 சுற்றுலா நிறுவனங்கள், கோவை மற்றும் கொங்குப் பகுதியில் உள்ள பல முக்கிய சுற்றுலா மற்றும் பயண வர்த்தக நிறுவனங்களும் கலந்து கொண்டன. இந்நிகழ்ச்சி, கொங்கு மண்டலத்துடன் […]