பள்ளப்பட்டி சாலையில் ஓடும் கழிவுநீர்.. பொதுமக்கள் அவதி

பள்ளப்பட்டி பகுதியில் கால்வாய் இல்லாததால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதி உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி நகராட்சி இ.பி. அலுவலகம் முன்புறம் கால்வாய் அமைக்கப்படாததால், கழிவுநீர் தொடர்ந்து நிரம்பி சாலைப் பகுதியில் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் அப்பகுதி பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் நாள்தோறும் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். கடந்த ஒரு வருடமாக நீடித்து வரும் இந்த பிரச்சினையைப் பற்றி பலமுறை மனு அளித்தும், எந்த தீர்வும் […]