சிதம்பரம் நடராஜர் கோவில்: சிவகாமி அம்மனுக்கு தங்கக் காசு மாலை காணிக்கை!

பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலில் சித்சபையில் வீற்றுள்ள சிவகாமி அம்மனுக்கு அணிவிக்க சென்னையை சேர்ந்த பக்தர் சுப்ரமணியன் சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 பவுன் தங்க காசு மாலையை வழங்கினார். கோவிலில் உள்ள அவரது கட்டளை தீட்சிதரான ராமலிங்க தீட்சிதர் மூலம் காணிக்கையாக நடராஜர் கோவில் பொது தீட்சிதர்களின் செயலர் சிவசுந்தர தீட்சிதரிடம் வழங்கினார்.இந்த காசு மாலை நேற்று காலை பூஜையின் போது சிவகாமி அம்மனுக்கு பொது தீட்சிதர்களால் அணிவிக்கப்பட்டது.

குட்கா விற்பனை செய்த 7 பேர் அதிரடி கைது

கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த கும்பல் பிடிபட்டுள்ளது. தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை மற்றும் குட்கா பொருட்களைச் சிதம்பரத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் கடைகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த 7 பேரைச் சிதம்பரம் நகர மற்றும் தாலுகா போலீசார் கைது செய்துள்ளனர். சுமார் 260 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் […]