கரூர் விபத்து வழக்கு: டெல்லியில் விஜய்யிடம் 5 மணி நேரம் சிபிஐ விசாரணை

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சோகமான சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் டெல்லியில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், கட்சியின் தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. கடந்த ஜனவரி 12-ஆம் தேதி முதல்முறையாக […]

கரூர்- 3 பெண் உட்பட 8 போலீசார்களிடம் சிபிஐ விசாரணை

கரூர் துயரச் சம்பவம்: தான்தோன்றி மலை சிபிஐ அலுவலகத்தில் மூன்று பெண் உட்பட 8 காவலர்கள் சிபிஐ விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து இந்த வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் படி சிபிஐ மாற்றப்பட்டு கரூர் தான்தோன்றி மலை […]

கரூரில் வேகமெடுக்கும் சிபிஐ விசாரணை… கேமிராவுடன் ஆய்வு

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் சி.பி.ஐ. விசாரணை தற்போது தீவிர வேகமெடுத்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில், சி.பி.ஐ. ஏ.எஸ்.பி. முகேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி முதல் கரூரில் உள்ள தாந்தோன்றி மலை […]

கரூர் வழக்கு-டில்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில மாநாட்டின் போது கரூரில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசல் மற்றும் அதில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ (CBI) தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். சிபிஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், இன்று காலை 10:30 மணியளவில் பின்வரும் 4 நிர்வாகிகள் டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு வந்தடைந்தனர்: புஸ்ஸி என். ஆனந்த் (தவெக பொதுச்செயலாளர்) ஆதவ் அர்ஜுனா (தவெக மாநிலத் துணைப் […]

ரோந்து பணி காவலர்கள் 2 பேரிடம் சிபிஐ விசாரணை

கரூர் துயரச் சம்பவம் -தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகை தற்காலிக சிபிஐ அலுவலகத்திற்கு, சம்பவத்தின் போது ரோந்து பணிகள் இருந்த காவலர்கள் இரண்டு பேர் விசாரணைக்கு வருகை. கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர். 110 நபர்கள் காயமுற்று சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு […]

கரூர்- ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட 6 பேரிடம் சிபிஐ விசாரணை

கரூர் துயர சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் , ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஒருவர் என ஆறு பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். கரூரில், கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த துயர சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற பகுதிகளின் வணிக நிறுவனங்கள், கடை உரிமையாளர்கள், மின்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், […]

சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் ஓய்வு நீதிபதியிலான குழு கரூர் வருகை

சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூவர் குழுவில் இன்று கரூர் சிபிஐ அலுவலத்திற்கு சுமித் ஷரன் ஐபிஎஸ் வந்துள்ளார். கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. கரூரில் முகாமிட்டுள்ள சிபிஐ அதிகாரிகள், சம்பவத்தில் இறந்தவர்களின் […]

போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேரிடம் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரியிடம் விசாரணைக்காக கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் கோவை பகுதியைச் சேர்ந்த ராகுல் காந்தி மற்றும் கரூர் டெக்ஸ்டைல் உரிமையாளர், நொய்யல் பகுதியைச் சேர்ந்த விவசாயி என 4 பேர் விசாரணைக்காக ஆஜர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் […]

கரூர்- உயிரிழந்த குடும்பத்தினர் வீட்டில் சிபிஐ விசாரணை

கரூர் துயர சம்பவம் விவகாரம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்த நபர்களை வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ள சிபிஐ அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட சென்ற அதிகாரிகள். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரில் கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் சுற்றுலா மாளிகையில் […]

கரூரில் வீடு வீ்டாக சென்று சிபிஐ விசாரணை

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். பலருக்கு சம்மன் அனுப்பி சுற்றுலா மாளிகையில் விசாரணை மேற் கொண்டு வரும் சிபிஐ அதிகாரிகள் இன்று கரூர் வேலுச்சாமிபுரம் அருகே உள்ள […]