கரூர்- ஸ்ரீ பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர் குளத்துப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய கார்த்திகை மாத திருவிழாவை முன்னிட்டு கரக பாலிக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு குளத்துப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாத திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் வீற்றிருக்கும் விநாயகர்,பகவதி அம்மன் உள்ளிட்ட பல்வேறு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ச்சியாக சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதன் பின்னர் தாரை தப்பட்டைகள் முழங்க ஆலயத்தில் கரக பாலிக்கு நிகழ்ச்சி நடைபெற்று […]

புதுகை-ஆவுடையார் கோயில் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம்

புதுக்கோட்டை மாவட்டம் திருப்பெருந்துறை எனும் ஆவுடையார்கோயில் ஸ்ரீஆத்மநாதசுவாமி திருக்கோயிலின் நான்காம் சோமவார தினத்தில் உற்சவர் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

கரூர்- கற்பக விநாயகர் கோவிலில் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம். இன்று சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு விநாயகர் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பா ல், தயிர், […]