சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வரும் ரயிலை நிரந்தர சேவையாக மாற்ற ஒப்புதல்
சென்னை: தாம்பரம் – திருச்சி இடையே வாரம் 5 நாட்கள் சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வரும் ரயிலை நிரந்தர சேவையாக மாற்ற ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், பண்ருட்டி வழியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது.
சென்னையிலிருந்து தென்காசிக்கு இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கம்
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பொங்கல் பண்டிகை கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூரில் இருந்து தென்காசிக்கு இன்று இரவு 11.50 மணிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06072) இயக்கப்படுகிறது. 8 தூங்கும் வசதி பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் என மொத்தம் 18 பெட்டிகளுடன் இயங்கும் இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, […]
பொங்கல் பண்டிகை: போத்தனூர் – செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் போத்தனூரில் இருந்து செங்கோட்டைக்கு (வண்டி எண் 06115) சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வருகிற 14-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு. சேலம், ஜோலார் பேட்டை. கல்பாடி, அரக்கோணம், பெரம்பூர், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல் மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி ஜங்ஷன், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், […]
கோவை – சென்னை இடையே சிறப்பு ரயில்
தென்னக ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-கோவையில் இருந்து வருகிற 11, 18-ந் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்படும் கோவை – சென்னை சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06034) மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்னை செல்லும். மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து ஜனவரி 12, 19-ந் தேதிகளில் இரவு 11.25 மணிக்கு புறப்படும் சென்னை-கோவை விரைவு ரெயில் (எண்:06033) மறுநாள் காலை 9 மணிக்கு கோவை வந்தடையும்.இந்த ரெயில் […]
கிறிஸ்துமஸ்-புத்தாண்டு.. தூத்துக்குடி-மைசூருக்கு சிறப்பு ரயில்!
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி – மைசூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இம்மாத இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையும், அதன் பின்னர் புத்தாண்டு பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. மேலும் அரையாண்டு விடுமுறை காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலர் குடும்பத்தோடு தென்மாவட்டங்களுக்கு திரும்புவர். இதையொட்டி தெற்கு ரயில்வேயில் பல்வேறு சிறப்பு ரயில்கள் இம்மாத இறுதியில் இயக்கப்பட உள்ளன. அந்த அடிப்படையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாட வருவோருக்கு மைசூரு – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் […]