ஒன்றிய அரசுக்கு மகாத்மா காந்தியை பிடிக்காது- முதல்வர் உரை

முதல்வர் ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு வந்தார். இன்று காலயில் கானாடுகாத்தானில் ரூ.61.78 கோடியில் கட்டப்பட்டுள்ள வேளாண் கல்லூரியை திறந்து வைத்தார். புதிய பல்நோக்கு அரங்கத்தையும் திறந்து வைத்தார், திறந்து வைத்த பல்நோக்கு அரங்கத்துக்கு சி.சுப்பிரமணியன் பெயரை சூட்டினார். பின்னர் கழனிவாசல் பகுதியில் ரூ.100.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சட்டக் கல்லூரியை திறந்து வைத்தார். சட்டக்கல்லூரி வளாகத்தில் நடக்கும் விழாவில் 28 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். காரைக்குடியில் அரசு நலத்திட்ட […]

சிவகங்கை மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப் பயணம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிவகங்கை மாவட்டத்தில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் தங்கி பல்வேறு அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார். முதல் நாளில், சிராவயல் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள காந்தி – ப.ஜீவா நினைவு அரங்கம், குன்றக்குடி அடிகளார் சிலை மற்றும் காரைக்குடியில் கவியரசர் முடியரசனார் சிலை ஆகியவற்றைத் திறந்து வைக்கிறார். இரண்டாம் நாளில், ரூ.61.78 கோடி மதிப்பிலான செட்டிநாடு வேளாண் கல்லூரி மற்றும் ரூ.100.45 […]

சிவகங்கை-மஞ்சுவிரட்டில் 126 பேர் காயம்

 சிவகங்கை அருகே கண்டுப்பட்டியில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் இதுவரை 126 பேர் காயம் அடைந்தனர். இதில் 30 பேர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிவகங்கை-மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டி 68 பேர் காயம்

சிவகங்கை மாவட்டம், சிராவயலில் மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 68 பேர் காயம் அடைந்துள்ளனர். காளைகள் முட்டியதில் 68 பேர் காயமடைந்த நிலையில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

வீட்டின் ஓட்டை பிரித்து 18 சவரன் நகை கொள்ளை

சிவகங்கை, வேங்கைப்பட்டியைச் சேர்ந்த சண்முகம்சுந்தரம் என்பவர் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்ற நிலையில், அவரின் வீட்டின் ஓட்டைப் பிரித்து 18 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

சிவகங்கை தொகுதியில் போட்டியா?- சீமான் விளக்கம்

 நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவகங்கை தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போகிறாரா என்ற செய்தியாளரின் கேள்விக்கு வித்தியாசமான முறையில் பதிலளித்தார். செய்தியாளரின் கன்னத்தை கிள்ளியபடி சிரித்துக்கொண்டே பதிலளித்த சீமான், இதுபோன்ற கேள்விகளுக்கு இப்போது பதில் சொல்ல முடியாது என்று தெரிவித்தார். இந்த நடத்தை செய்தியாளர்களிடையே சிரிப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. சிவகங்கை தொகுதியில் சீமான் போட்டியிடவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவிய நிலையில், இந்தக் கேள்வி எழுந்தது. ஆனால் சீமான் அதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லாமல், […]

சிவகங்கை -ஆக்கிரமிப்பு வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு- பொதுமக்கள் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள ஆக்கிரமிப்புப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மின்சாரத்தை துண்டிக்கும் மின்வாரியத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்நிலை மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. நீர்நிலைப் பகுதிகளில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வீடுகளைக் காலி செய்யுமாறு வருவாய்த்துறை சார்பில் ஏற்கனவே பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. காலக்கெடு முடிந்தும் வீடுகள் […]

சிவகங்கையில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அசிஸ் நகர் பகுதியில், வீட்டில் மின் மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்ததில், லூசியா (48) என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் இன்று அதிகாலையில் நடந்துள்ளது. சிவகங்கை, அசிஸ் நகர் லூசியா தனது வீட்டில் அன்றாடத் தேவைக்காகத் தண்ணீர் நிரப்புவதற்காக மின் மோட்டாரின் ஸ்விட்ச்-ஐ ஆன் செய்துள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக, ஸ்விட்ச் பாக்ஸ் அல்லது மோட்டார் இணைப்புகளில் […]

அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்… 11 பேர் பலி…

சிவகங்கை திருப்பத்தூர் – பிள்ளையார்பட்டி சாலையில் இரு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் சென்ற பேருந்தும் காரைக்குடி நோக்கி சென்ற பேருத்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழத்துள்ளதாகவும், 40 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பலர் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். […]

மினிபஸ் படிகட்டில் பயணித்த +2 மாணவன் பலி

சிவகங்கையில் மினிபஸ் படியில் பயணம் செய்த +2 மாணவர் உயிரிழந்துள்ளார். மினிபஸ் விபத்தில் படியில் பயணித்த சூர்யா என்ற இளைஞர் படுகாயம் அடைந்துள்ளார். மினிபஸ் பள்ளி வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.