சிவகாசி ரயில் நிலையத்தில் இந்தித் திணிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

தொழில் நகரமான சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சுத் தொழில்கள் உலகப் புகழ்பெற்றவை. இந்த வர்த்தக நிமித்தமாக இந்தியா முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சிவகாசி ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். சிவகாசி ரயில் நிலையத்தைத் தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, மாணிக்கம் தாகூர் எம்.பி-யின் முயற்சியால் கடந்த சில வாரங்களாக அங்கு மேம்பாட்டு மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ரயில் நிலைய நடைமேடையில் புதிதாக வைக்கப்பட்டிருந்த […]