கால்பந்து விளையாடிய கல்லூரி மாணவி மயங்கி விழுந்து பலி
சேலம்: அரசு கலைக்கல்லூரியில் கால்பந்து விளையாடிய மாணவி, மைதானத்தில் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை ஊராட்சி வடசென்னிமலையில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், ஆண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று மதியம் ஒரு மணியளவில், கல்லூரி மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலாம் ஆண்டு பிஎஸ்சி கணினி அறிவியல் படிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியைச் சேர்ந்த வடிவேல் […]