விஜய் கை காட்டுபவர்தான் எம்எல்ஏ – செங்ஸ் பேச்சு
புதுச்சேரியில் மக்கள் சந்திப்பை நடத்திய விஜய், இன்றைய தினம் ஈரோட்டில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக பெருந்துறை தாலுகாவிற்கு உட்பட்ட விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு – கொச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள சரளை பகுதியில் தான் தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. எனவே நெடுஞ்சாலையில் இருந்து உட்புற சாலை வழியாக வருவோருக்கு வழிகாட்டும் வகையில் போக்குவரத்து போலீசார் முக்கிய ஏற்பாடுகளை செய்துள்ளனர். குறிப்பாக குன்னத்தூர் […]