2 குழந்தையின் தந்தையை திருமணம் செய்வதாக அடம்- மருத்துவ மாணவி கொலை
சேலத்தில் மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. திருமணமாகி 2 குழந்தைக்கு தந்தையாக உள்ளவரை திருமணம் செய்வேன் என அடம் பிடித்ததால் கோபம் அடைந்த தந்தை கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை பிடிக்க தனிப்படையினர் சென்னை சென்றுள்ள நிலையில், அவர் வளர்ப்பு தந்தை என்பதும் தெரியவந்திருக்கிறது. சேலம் அடுத்த சித்தர்கோயில் அருகில் தனியார் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு திருநெல்வேலி பக்கமுள்ள வீரவநல்லூர் பாரதிநகரை சேர்ந்த […]