செங்கோட்டையன் ஒரு செல்லாக் காசு- செல்லூர் ராஜூ
மதுரை பைக்காரா பகுதியில் புதிய நியாய விலைக்கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு முல்லை பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டம் முழுமையாக மக்களுக்கு வந்து சேரும். முதல்வர் திறந்து வைத்த பிறகு கூட இதுவரைக்கும் 30 சதவீத வாடுகளுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. முறையாக வழங்கப்படவில்லை. திட்டம் தொடங்கியும் மக்களுக்கு பயனில்லாமல் உள்ளது.முதலமைச்சருக்கு பயம் வந்துவிட்டது. பாஜக- அதிமுக […]
நடிகர் என்பதால் கூட்டம் கூடுகிறது… செல்லூர் ராஜூ
நடிகர் என்ற முகத்தை வைத்து வெற்றி பெறலாம் என நினைக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். நடிகர் என்பதால் கூட்டம் கூடுகிறது. நடிகர் என்ற மாஸ் மட்டுமே எடப்பாடிக்கு இல்லையே தவிர, மக்கள் எங்களுக்காக கூடுகிறார்கள்; விஜய் அறையில் உட்கார்ந்து அரசியல் செய்கிறார், களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும் என்று கூறினார்.
பிரிந்து சென்றவர்களை சேர்க்க பாஜக முயற்சி செய்வது தவறில்லை
அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்-ஐ சேர்ப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைப்பது பாஜகவின் பெருந்தன்மையை காட்டுகிறது. பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க பாஜக முயற்சி செய்வது தவறில்லை,”இவ்வாறு தெரிவித்தார்.