சேற்றில் சிக்கி குட்டி யானை பலி- சோகம்
கூடலூர் அருகே சேற்றில் சிக்கி குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர் சோலையை அடுத்த முறம்பிலாவு பகுதியில் தனியார் தோட்ட சதுப்புநிலம் உள்ளது. இப்பகுதிக்கு அடிக்கடி யானைகள் வந்து செல்வது வழக்கம். அவ்வாறு நேற்று முன்தினம் மாலை யானை கூட்டத்துடன் வந்த ஒரு குட்டி யானை சேற்றில் சிக்கியது. அந்த குட்டியை மீட்க தாய் யானை மற்ற யானைகள் முயன்றன. ஆனால், சேற்றில் இருந்து வெளியே இழுக்க முடியாததால், குட்டி யானை இறந்துள்ளது. […]