மாவோயிஸ்ட் கோட்டையில் அதிரடி வேட்டை: ஒரு கோடி பரிசு அறிவிக்கப்பட்ட ‘அனல் தா’ உட்பட 15 பேர் பலி

ஜார்க்கண்ட் மாநிலம் சாரண்டா வனப்பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற பயங்கரத் துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தலைவர் ‘அனல் தா’ என்கிற பதி ராம் மஞ்சி உட்பட 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கும்படிஹ் கிராமம் அருகே மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், சுமார் 1,500 சிஆர்பிஎப் (கோப்ரா பிரிவு) மற்றும் ஜார்க்கண்ட் போலீசார் இணைந்து இந்தத் தேடுதல் வேட்டையை நடத்தினர். பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் திடீர் […]

மரண பயம் காட்டிய எக்ஸ்பிரஸ் ரயில்: லாரி மீது மோதி நின்றதால் தப்பியது பல உயிர்

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில், கோண்டா – அசன்சோல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தபோது நவாத் பகுதியில் உள்ள ரயில்வே கிராசிங்கில் ஒரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. ரயில்வே கேட் மூடப்படாத நிலையிலும், ரயிலுக்கு உரிய சிக்னல் கிடைக்காத நிலையிலும் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. தண்டவாளத்தைக் கடக்க முயன்ற வாகனங்கள் மிக அருகில் ரயில் வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தன. இருப்பினும், இன்ஜின் டிரைவர் துரிதமாகச் செயல்பட்டு ரயிலின் வேகத்தைக் குறைத்ததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. […]

யானை தாக்கி ஒரே நாளில் 5 பேர் பலி

ஜார்க்கண்ட் மாநிலம், ராம்கட் மாவட்டத்தில் உள்ள சிர்கா வனப்பகுதியில் நேற்று யானை தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். அம்மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நேற்று மதியம் யானைகளை வீடியோ, செல்பி எடுக்க முயன்ற அமித் குமார் (32) என்ற இளைஞரை யானை மிதித்துக்கொன்றது.இதையடுத்து, ராஞ்சி மாவட்டம் ஜிண்டு கிராமத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியில் நேற்று இரவு யானை தாக்கி 36 வயது நபர் உயிரிழந்தார். இதன் மூலம் ஜார்க்கண்ட்டில் நேற்று ஒரேநாளில் யானை தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.ஜார்க்கண்ட் […]