காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம்- ஐகோர்ட்டில் அரசு உறுதி

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று ஐகோர்ட்டில் அரசு உறுதி அளித்துள்ளது. 28 மாவட்டங்களில் மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் 3 மாவட்டங்களில் மதுபான பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் பாதி அளவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்துவதில் இனி அவகாசம் வழங்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

நாளை முதல் அமல்: காலி மதுபாட்டில்களைக் கொடுத்தால் ரூ.10 திரும்பப் பெறலாம்

சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் நாளை (ஜனவரி 06, 2026) முதல் நடைமுறைக்கு வருகிறது. இது தொடர்பாக மக்கள் செய்தி தொடர்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,டாஸ்மாக் லிட், சென்னை (வடக்கு தெற்கு மத்தியம்) மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் 06-01-2026 முதல் அமல்படத்தப்பட உள்ளது. வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசுவதைத் தவிர்க்கும் பொருட்டு. அவற்றை மதுபானக் கடைகளிலேயே திரும்பப் பெறும் திட்டத்தின்படி. மதுபாட்டில்களை […]