டிச.4 ல் சேலத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரை?..

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கட்சியின் நிர்வாக நடவடிக்கைகள் முடங்கியிருந்த நிலையில், ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு தீவிரமடைந்துள்ளன. அதன்படி, அண்மையில் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் விஜய் தலைமையில் தற்போது தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் மீண்டும் தவெக தலைவர் விஜய் பரப்புரை பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார். அடுத்தகட்டமாக சேலத்தில் அவர் […]