டிஜிட்டல் கைது என மிரட்டி முதியவரிடம் ரூ.29.50 லட்சம் பறிப்பு
திருநெல்வேலி மாநகரம், பெருமாள்புரத்தை சேர்ந்த 78 வயதான முதியவர் ஒருவரை வாட்ஸ்அப் வீடியோ காலில் (Whatsapp Video Call) தொடர்பு கொண்டு மர்ம நபர் ஒருவர் பேசியுள்ளார். அந்த நபர் தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டு, முதியவரின் ஆதார் அட்டை மற்றும் சிம் கார்டு விபரங்களை பயன்படுத்தி சட்டவிரோத செயல் நடைபெற்றுள்ளதாகவும், அதற்காக வழக்குப்பதிவு செய்யபட்டிருப்பதாக கூறி, அதற்கான ஆதாரங்களை போலியாக தயார் செய்து FIR Copy, Arrest Warrant போன்ற ஆவணங்களை […]
ஓய்வுபெற்ற தம்பதியை 18 நாட்கள் ‘டிஜிட்டல் கைது’ செய்து ரூ.14.85 கோடி மோசடி
டெல்லியில் வசித்து வரும் டாக்டர் தனேஜா மற்றும் அவரது மனைவி இந்திரா ஆகியோரிடம் சைபர் குற்றவாளிகள் கைவரிசை காட்டியுள்ளனர். கடந்த 48 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெற்ற இந்தத் தம்பதி, தற்போது டெல்லியில் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். கடந்த டிசம்பர் 24-ம் தேதி இந்திராவைத் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், தங்களைச் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். தேச பாதுகாப்பு விதிகளின் கீழ் பணமோசடி செய்ததாகக் கூறி, தம்பதி இருவர் […]
டிஜிட்டல் கைது…முதியவரிடம் ரூ.1.92 கோடி மோசடி…
ஐதராபாத்தில் டிஜிட்டல் கைது மோசடி மூலம் 71 வயது முதியவரிடம் ரூ.1.92 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து முதியவருக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு சிலர் பேசியுள்ளனர். முதியவரின் ஆதார் கார்டை பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் முதியவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும், தங்கள் அனுமதி இல்லாமல் யாரிடமும் எதுவும் பேசக்கூடாது என்று மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன முதியவர் […]